Wednesday 31 October 2012

'நிலம்' புயல் சென்னை அருகே கரையைக் கடக்கிறது

சென்னை,அக்.31(டி.என்.எஸ்) வங்க கடலில் மையம் கொண்டு இருக்கும் நீலம் புழலால் தமிழக கடலோர மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல் தற்போது சென்னையை நெருங்கி கொண்டிருக்கிறது.

நேற்று வங்க கடலில் உருவெடுத்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தை அச்சம் கொள்ள செய்தது. தற்போது அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இன்று வேகமாக நகர்ந்து சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் தற்போது 270 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் பல காற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

சென்னை துறைமுகத்தில் 8ஆம் என் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பதால், சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. (டி.என்.எஸ்)


புயல்களுக்குப் பெயர் பிறந்த கதை

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது புயல்களுக்கும் சூப்பராக பெயர் சூட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இது இன்று நேற்று நடப்பதல்ல. கடந்த 1945ம் ஆண்டு முதலே புயல்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் இணைந்து இந்த பெயர்களைச் சூட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மியான்மர், ஓமன், ஆகிய நாடுகள் இணைந்து பெயர்களை முடிவு செய்கின்றன. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றாக சூட்டப்பட்டு வருகின்றன.
கடைசியாக முர்ஜான் என்ற புயல் இப்பிரதேசத்தைத் தாக்கியது. இதப் பெயரை வைத்த நாடு ஓமன். இந்தப் புயல் அரபிக் கடலில் உருவாகி சோமாலியா பகுதியில் கரையைக் கடந்தது.
நிலம் - பாகிஸ்தான் புயல்
இந்த சீசனில் முதல் முறையாக இந்தியப் பகுதியில் ஒரு புதிய புயல் உருவாகி இருக்கிறது, வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுத்திருக்கிறது. இப் புயலுக்கு நிலம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரை சூட்டிய நாடு பாகிஸ்தான் ஆகும்.
அடுத்த புயல் வரும்போது அதற்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்படும். இந்தப் பெயரை சூட்டிய நாடு இலங்கை.

Saturday 13 October 2012

தொலைபேசி: ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் வேறு ஒருவருக்கு அழைப்பு செல்வது போன்ற பிரச்னைகள் இருந்தன


அதாவது கிரஹாம்பெல் தொலைபேசி என்ற கருவியை கண்டுபிடித்த 5 ஆண்டுகளிலேயே மெட்ராசில் தொலைபேசிகள் சிணுங்கத் தொடங்கிவிட்டன.
மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் ரங்கூன் ஆகிய நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் ஆரம்பிக்க 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி (ORIENTAL TELEPHONE COMPANY) என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த அனுமதியைப் பெற்று இந்தியாவில் டெலிபோன் தொழிலில் காலடி எடுத்துவைத்தது. இந்த நிறுவனம் முதலில் அலுவலகம் தொடங்கியது மெட்ராசில்தான். 19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் 37ஆம் நம்பர் கட்டடத்தில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.
புதிதாக தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்ட சமயத்தில், சுமார் 4 லட்சம் மக்கள் வசித்த மெட்ராசில், வெறும் 17 பேர் மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தினர். அந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது. அந்தக் கால வர்த்தகர்கள் இடையே தொலைபேசிக்கு பெரிய வரவேற்பு எதுவும் இல்லை.
சாதாரண மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். எனவே தொலைபேசி நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால் அதுவும் பெரிதாக எடுபடவில்லை. 1910ஆம் ஆண்டு கூட வெறும் 350 பேரிடம் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதிலேயே நிறைய கிராஸ் டாக், ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் வேறு ஒருவருக்கு அழைப்பு செல்வது போன்ற பிரச்னைகள் இருந்தன.
இதன்படி 1923ஆம் ஆண்டு, ரூ.5 லட்சம் முதலீட்டில் மெட்ராஸ் டெலிபோன் கம்பெனி லிமிடெட் தொடங்கப்பட்டது.
இதனிடையே மெல்ல மெல்ல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1224ஆக உயர்ந்தது. இது மட்டுமில்லாமல், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், துறைமுகம், சால்ட் குவார்ட்ரஸ் ஆகிய இடங்களில் மக்கள் வசதிக்காக பொதுத் தொலைபேசிகளும் அமைக்கப்பட்டன.
அப்போதெல்லாம் தொலைபேசி ஒயர்கள் தலைக்கு மேலாகத்தான் சென்று கொண்டிருந்தன. கோவில் தேர் திருவிழாக்கள், சுழன்றடிக்கும் காற்று என பல காரணங்களால் இந்த ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கின. இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பூமிக்கு அடியில் கேபிள் பதிப்பது என மெட்ராஸ் டெலிபோன்ஸ் முடிவெடுத்தது. 1927-28 காலகட்டத்தில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று கிண்டி வரை கேபிள்கள் பதிக்கப்பட்டன.
இந்தப் போர் தொலைபேசிகளின் பயன்பாட்டை அரசிற்கு தெளிவாகப் புரிய வைத்தது. எனவே அரசே தொலைபேசி தொழிலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இப்படித் தான் மெட்ராஸ் மாநகரில் தொலைபேசிகள் அறிமுகமாகி, இன்று அனைவர் கைகளிலும் செல்போன்களாக சிணுங்கிக் கொண்டிருக்கின்றன.

பஜாஜ் ஸ்கூட்டர்: இந்தியர்களின் வீடுகளை அலங்கரித்து வந்த செல்ல வாகனங்களில் ஒன்று பிரியாவிடை பெற்றுள்ளது.

இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த வாகனங்களில் ஒன்றான ஸ்கூட்டர்களுக்கு விடை கொடுக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இனிமேல் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபடப் போவதில்லை என்று அது அறிவித்துள்ளது.

பஜாஜ் ஸ்கூட்டர்கள் இந்திய மக்களின் இல்லங்களுக்குப் பெருமை சேர்த்த வாகனங்களில் ஒன்று. ஸ்கூட்டர் என்றாலே பஜாஜ் என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த இடத்தில் இருந்தது பஜாஜ் ஸ்கூட்டர்.
ஆனால் தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பையே ஒட்டுமொத்தமாக நிறுத்து விட்டது பஜாஜ். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் வெளியிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பஜாஜ் சேடக் பிராண்ட் ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்தியது பஜாஜ் நிறுவனம். இது ஒரு காலத்தில் உலகிலேயே அதிக அளவில் விற்பனையான ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் திகழ்ந்ததாகும்.
பின்னர் கிறிஸ்டல் என்ற பெயரில் ஸ்கூட்டர் ஒன்றை அறிவித்தது. ஆனால் இது வெளிவரவே இல்லை. இப்போது மொத்தமாக ஸ்கூட்டர் தயாரிப்புக்கே குட் பை கூறி விட்டது பஜாஜ்.
ஸ்கூட்டர்களுக்குப் பதில் மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக கவனம் செலுத்தப் போவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய நடுத்தர வர்க்க இந்தியாவின் பிரியமான வாகனம் மோட்டார் சைக்கிள்தான். எனவே அதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக பஜாஜ் கூறியுள்ளது.
ஹீரோ ஹோண்டாவின் வருகையால்தான் ஸ்கூட்டர்கள் மீதான இந்தியர்களின் மோகம் குறைந்து போக முக்கியக் காரணம் என்று கூறலாம்.
எப்படியோ இந்தியர்களின் வீடுகளை அலங்கரித்து வந்த செல்ல வாகனங்களில் ஒன்று பிரியாவிடை பெற்றுள்ளது.

கூட்டாஞ்சோறு: சிறிய கரண்டியால் கூட்டாஞ்சோறு எல்லோருக்கும் பரிமாறப்படும். பால் பேதமின்றி எல்லாக் குழந்தைகளும் கூடிச்சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் உணவு


கூட்டாஞ்சோறு என்பது குழந்தைகள் வட்டாரத்தில் புழங்கும் முக்கியமான சொல் ஆகும். சிறுவர், சிறுமியர் சேர்ந்து விளையாடும்போது கூட்டாகச் சேர்ந்து சோறு ஆக்கிச் சாப்பிடுதல் என்பது உற்சாகமான விஷயம். குழந்தைகள் ஒவ்வொருவரும், அவரவர் வீட்டிற்குச் சென்று, அம்மாவுக்குத் தெரியாமல், அரிசி, வெல்லம், பருப்பு போன்ற பொருட்களை எடுத்து வருவார்கள். சில சமயம் வீட்டை விட்டு வெளியேறும் போது, பெரியவர்கள் பார்த்தால் திட்டு, உதை விழும். ஓரளவு வளர்ந்த பெரிய பெண் பிள்ளைகள் தான் மூன்று கற்களைக் கட்டிவைத்து, அதன்மேல் மண்சட்டியை வைத்து, அடுப்பில் நெருப்பை எரிக்க விறகு, சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவார்கள். பெரும்பாலும் சோற்றை ஆக்கி, அதில் வெல்லம் அல்லது சர்க்கரையைக் கொட்டிக் கிண்டிச் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பார்கள் சிலவேளை அருகிலிருக்கும் திருமணமான இளம்பெண்கள் உணவு சமைப்பது எப்படி? பதம் பார்ப்பது எப்படி என்று ஆலோசனை வழங்குவார்கள். குழந்தைகள் கல்யாணமுருங்கை மரத்தின் இலையைப் போட்டு முன்னே உட்கார்ந்து கொள்ள, சிறிய கரண்டியால் கூட்டாஞ்சோறு எல்லோருக்கும் பரிமாறப்படும். பால் பேதமின்றி எல்லாக் குழந்தைகளும் கூடிச்சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் உணவு என்பது குழந்தைகளைப் பொறுத்தவரையில் அமுதம் தான்.
பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘வெடி தேங்காய்’ அருமையான உணவாகும். பெரிய தேங்காயின் மேற்பகுதியிலுள்ள கண்ணைத் திறந்து, நீரைக் குடித்துக் காலி செய்து கொள்ள வேண்டும். பொட்டுக் கடலை, வெல்லம் இரண்டையும் அம்மியில் வைத்து நசுக்கிய தூளை, தேங்காய்க்குள் திணித்து, ஓட்டையை வெல்லக் கட்டியினால் மூடிவிடுவார்கள். ஓலையைப் போட்டுத் தீயை மூட்டித் தேங்காயை அதனுள் இட்டுச் சுடுவார்கள். சூடேறிய தேங்காய் ஓடு சத்தத்துடன் வெடிக்கும். தீயை அணைத்து விட்டுத் தேங்காயை வெளியே எடுத்து, ஆற வைத்த பின்னர், எஞ்சியிருக்கும் சிரட்டையை நீக்கினால், வெல்லத்துடன் சேர்ந்து சூடான தேங்காய் மணக்கும்; சாப்பிடச் சுவையாக இருக்கும். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வெடி தேங்காயைச் சாப்பிடுவார்கள். இந்தச் செயலைத் தனி ஒரு ஆளாகச் செய்தால் அவ்வளவு சுவராசியம் இருக்காது. ஒத்த வயதுடைய சிறுவர்கள் சேர்ந்து வெடிதேங்காய் தயாரிக்கும்போது ஏற்படும் அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தின்பண்டம் என்றாலும், அதைத் தயாரிக்கப் பலர் கூட்டாகச் சேர்ந்து முயலுவது, எல்லோருரிடம் உற்சாகத்தைத் தரும் விஷயமாகிறது.

கிட்டிப் புள்: கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும் போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்து விட்டாலும் அவுட்!


கிரிக்கெட்டுக்கு ஆதி விளையாட்டு கிட்டிப் புள்! கிட்டி என்று அழைக்கப் படும் பாதி விறகு போன்ற சவுக்குக் கட்டை ஒரு முனையில் பாதியாகச் சீவப் பட்டு கிரிக்கெட்டில் இருக்கும் 'பேட்'டுக்குச் சமானமாய் இருக்கும். புள் என்று அழைக்கப் படும் வஸ்து,  உள்ளங்கை சைஸில்அதே சவுக்குக் கட்டை இரண்டு பக்கமும் கூராகச் சீவப்பட்டு இருக்கும்.  இதைப் பந்தாகக் கொள்ளலாம்! 
                        
ஒரு வட்டத்துக்குள் செதுக்கப் பட்டிருக்கும் சின்னஞ்சிறு நீள் குழியில் இந்தப் புள் குறுக்கு வாட்டில் வைக்கப் பட்டு, 'கீந்த'ப் படும்! கெந்தி விடுதல் கெந்துதல் என்பதுதான் கீந்துவது என்று பேச்சு வழக்காக இருந்தது. சற்று தூரத்தில் ('கீந்த'ப் படும் புள் உத்தேசமாகப் பயணம் செய்யும் தூரத்தில்) எதிர்க் கட்சி ஆட்கள் நின்றிருப்பார்கள் கீந்தப் படும் 'புள்'ளை (கையில் துண்டுடன் அல்லது கழற்றப்பட்ட அவரவர் சட்டையுடன் - விக்கெட் கீப்பர் போலத்) தயாராய் நிற்கும் எதிர் டீம் ஆட்கள் கேட்ச் செய்து விட்டால் கீந்திய ஆள் அவுட். பக்க வாட்டிலோ, தலைக்கு மேலோ வேகமாக 'கீந்த'க் கூடியவர்கள் திறமை சாலிகள். 
                     
இதில் கண்டிஷன் எல்லாம் உண்டு. திரும்பி நின்று தலைகீழாய் கால்களுக்கிடையே கீந்த பெரும்பாலும் தடை விதிக்கப் படும்! வேகம் அதிகம் இருக்கும் என்பதால். நேராக நின்றுதான் கீந்த வேண்டும்!! கேட்ச் பிடிக்கப் படாமல் கீழே விழும் 'புள்'ளை எதிர் டீம் ஆட்கள் எடுத்து, கீந்தியவன் அந்த வட்டத்தின் மேல் முனையில் வைத்திருக்கும் கிட்டியை அடிக்க வேண்டும். புள்ளால் கிட்டியில் அடித்து விட்டால் கீந்தியவர் அவுட். 
                  
இதிலும் தப்பி விட்டால் அந்தப் 'புள்' எங்கு விழுந்திருக்கிறதோ அங்கு சென்று கிட்டியால் 'புள்'ளை ஒரு முனையில் தட்டி மேலெழுப்பி அடிக்க வேண்டும். இது மாதிரி மூன்று முறை செய்யலாம். மூன்றாவது முறையும் புள்ளை மேலே எழுப்பி எவ்வளவு தூரத்தில் அடித்திருக்கிறோம் அங்கிருந்து வட்டம் வரை கிட்டியால் அளந்து கொண்டே வர வேண்டும். அது ஸ்கோர்!
                  
பதில் ஆட்டத்தில் எதிர் டீம் அந்த டார்கெட்டைத் தாண்ட வேண்டும்!
                         
கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும் போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்து விட்டாலும் அவுட்! அதே சமயம் புள்ளைக் கிட்டியால் அடித்து மேலே எழுப்பி அதை இரண்டு முறை மூன்று முறை என்று எத்தனை முறை வேண்டுமானாலும் (முடிந்தால்) தட்டி அப்புறம் அடிக்கலாம். இதற்கு(த்தான்) கில்லி என்று பெயர்! அபபடி அடிக்க அடிக்க கிட்டியால் வட்டம் வரை அளக்கும் ஒரு அளவை இரண்டு மடங்கு மூன்று மடங்கு என்று உயரும் ஏதோ ஒரு கட்டத்தில் 'புள்ளா'ல் அளக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஸ்கோர் செம எகிறு எகிற ஒரு வாய்ப்பு! 
                      
இந்த மாதிரி 'கில்லி' அடிக்கும் முயற்சிகளில் இருக்கும்போது(ம்) எதிர் டீம் கேப்டன் "ஸ்கோர் என்ன" என்று கேட்பார். (மற்ற சமயங்களிலும் கேட்கலாம். இப்போது கேட்டால் அடிப்பவரின் கவனத்தைக் குலைக்கலாமே!) யாராவது அவசரப் பட்டு தப்பாகச் சொல்லி விட்டால் போச்! அத்தோடு அந்த டீமின் ஆட்டமே காலி. எனவே ஒவ்வொரு டீமிலும் ஸ்கோர் சொல்ல என்று தனியாக ஆட்களை வைத்து விடுவார்கள், அல்லது கேப்டன் 'வேறு யாரும் சொல்லக் கூடாது. நான்தான் சொல்வேன்' என்று சொல்லி விடுவார்! 
              
ஆட்டத்தின் இந்த இடம் வாண்டுகள் கிரிக்கெட்டில் ஸ்கோர் கேட்ட இடத்தில் நினைவுக்கு வந்ததால்தான் முழு ஆட்டத்தைப் பற்றியும் நினைவுக்கு வந்து நினைவுகள் கூடவே நடந்தன! 
                         
கில்லி அடிக்கும் போது கேட்ச் பிடிக்க முயன்று எத்தனை முறை இரண்டு கை மணிக்கட்டுகளிலும் கிட்டியால் அடி வாங்கியிருக்கிறோம் என்று மணிக்கட்டுகள் வலியை நினைவு கூர்ந்தன. 
                      
கிட்டியாலும், புள்ளாலும் அடிவாங்கிய நாட்களும், தெருவில் தாண்டிச் செல்வோர் மீது பட்டு, சண்டை ஏற்பட்ட நாட்களும் நினைவில் நடை பயின்றன.

அம்மி ஆட்டுகல்: இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீசியெறியப்பட்ட அம்மி, ஆட்டு உரல்:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடுகள் தோறும் அம்மிக்கல், ஆட்டுரல் இடம் பெற்றிருக்கும். சமையலுக்கு மசாலா பொருட்களை அரைக்க, அம்மிக் கல்லையும், மாவு அரைக்க, ஆட்டு உரல்களையும் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட, கிரைண்டர், மிக்சி வரத்து துவங்கியதும், பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக் கல்லும், ஆட்டுரலும், பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், கணவர்களையும், குழந்தைகளையும், வேலை, பள்ளிக்கு அனுப்பும் இல்லத்தரசிகளுக்கும், மிக்சியும், கிரைண்டரும், பெரும் உபயோகமாக இருந்தது. சமையல் பணியை விரைந்து முடிக்க இவை உதவின.

மின்வெட்டு ஆபத்து:கடந்த ஆட்சியில் மின்சார தேவைக்கு ஏற்ப, உற்பத்தியை பெருக்காததன் விளைவு, இந்த ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. ஆட்சி மாறியும், மின்தடை நேரம் குறையவில்லை. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் என இருந்த மின்தடை, தற்போது, 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. அதிகாரப் பூர்வமாகவும் இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு இன்னும் கிராம பகுதிகளில் நிலவுகின்றன.

மிக்சி, கிரைண்டர் ஓடாது:மின்தடை செய்யப்படும் நேரங்கள், பெரும்பாலும் சமையல் செய்யும் காலை நேரத்திலும், இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் மாலை நேரத்திலும் தான். இதனால், பெண்களுக்கு சமையல் பணிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மிக்சி, கிரைண்டர் இயங்காததால், இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விற்பனைக்கு தயார்:தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து கருப்பு கல்லை வாங்கி வந்து, சாலையோரம் "டெண்ட்' அமைத்து, அம்மிக்கல், ஆட்டுரல்களை விற்பனை செய்து வருகின்றனர்

Monday 8 October 2012

தேன்: தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது புளியங்காஅடிக்கிறது,மாங்கா அடிக்கிறது


நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது புளியங்காஅடிக்கிறது,மாங்கா அடிக்கிறது ரொம்ப அலாதியான விருப்பம்,சந்தோசம்னும் சொல்லலாம்.ஆளுக்கு ஒரு சைக்கிள் வச்சிருப்போம்.காலைல சரியா மணிகெல்லாம் நாலஞ்சு பேரா சைக்கிளை எடுத்துக்கிட்டு வெள்ளக்குளம் போவோம்.போகும் போது பந்தயம் வப்போம் யாரு வேகமா வண்டி(சைக்கிள்)ஓட்ரதுன்னு.
வெள்ளக்குளம் அடஞ்சதும் கொண்டுப்போன மாத்து துணிகள ஒரு மேடுவாகு பாத்து வச்சிட்டு,கோவளம்மாதிரி வேட்டிய மடிச்சுக்கட்டி தொபுக்குனு தண்னீள பாய்வோம்.ஏற்கனவே குளிச்சிக்கிட்டு இருக்குற பிரண்ட்ஸ் செல்லாம்,,ஓன்னு சத்தம் போடுவாங்க!பெரிசுங்களெல்லாம் வாய்க்கு வந்த படி யேசுங்க!தொபுக்குனு பாயம் போது குடலுக்குள்ளெ குளுவும்(குளிரும்)பாருங்க!ஆஹா!அப்ப தண்ணியெல்லர்மேலயும் தெரிக்கும்நமக்கும்தான் அத இப்ப நினச்சாலும் குளுவுது.
தொட்டு விளையாட்டுகன்னுவிளையாட்டுசாபுத்திரிப்போட்டு யார் தோக்குறாங்களொ அவங்க கண்ண கட்டிடுவோம்.ரெடி 1,2,3ன்னு சொன்னதும் தண்ணில முக்கிக்குவோம்,யார கரட்ட தொடுரவங்க அவுட் அவங்க கண்ண கட்டனும்.சில பேருக்கு குளு தண்ணின்னா ஆரம்பத்துல உடனே நனய மாட்டாங்க,மெதுவா,ஒவ்வொரு படியா எறங்குவானுவ!அவன மாறி ஆளபின்னடிலேந்து ஒருத்தன் புடுச்சி தள்ளுவான்,கெட்ட வார்த்த பேசிகிட்டே குளிக்க ஆரம்பிச்சிடுவான் நம ஆளு.அவனும் விளையாட்டுக்கு வரேன்பான்,கடசியா வந்தவன்னு (தண்டனை?)அவன் கண்ண கட்டுவோம். நேரம்போறதே தெரியாது.
திடீர்ன்னு ஒருத்தன் நினவூட்டுவான்.என்னாங்கடா ஸ்கூலுக்கு லேட்டாச்சி நான் போறம்பா!வர்ரவன் வா சண்முக சார்ட்ட அப்பரமா அடிவாங்க முடியாது.முட்டி போடச்சொல்வார்பெற்றொரை கூட்டிட்டு வரச்சொல்வார்ன்னு லச்சிய வீரன்போல் அவசர அவசரமா கிளம்புவான்,அவனெ சில பேரு தொடருவாங்க!சிலபேரு அவங்க கடக்குரானுவ பயந்தாகோளிங்க.சொல்லிட்டு சத்தமாசிரிப்பாங்க!அவங்க விளையாட்டுத்தொடரும்.
லேட்டா ஸ்கூலுக்கு வந்து ஏதாவது பொய் சொல்லி தப்ப பாப்பாங்க!இல்ல மாட்டிக்கிட்டு அடிவாங்குவானுவ!ஸ்கூல் விட்டதும் சாயங்காலம் அவசரமா வீட்லேந்து கிளம்பி புளியாங்கா(புளி-காய்)அடிக்க போவோம்.கைல கிட்டு பில்லு,மொலகா பொடி உப்பு வச்சிருப்போம்.ரோட்டோரமா சைக்கிளை நிறுத்திட்டு மல,மலன்னு  நா லஞ்சு பேரா ஏறிபரிபானுங்க,கீழே பேரு சைக்கிள் திருட்டுப்போகாம இருக்க காவல் காப்பனுங்க!யாரும் வரங்கலான்னு பாக்க காரணம் குத்தகைகாரன் வந்தா புடிச்சி எல்லாத்தையும் புடுங்கிக்குவான்,அடிப்பான்.பேரு கீழ விழுரத பொறக்கனும்.பக்கா பிளேன் போங்க. மேல ஏறி பறிக்கிறவனுவ பெரும்பாலும் வேட்டில கட்டிக்குவானுவ!இப்படிபறிச்சத எடுத்துக்கிட்டு,யார் வீட்டு மாடியிலெயாவது கொண்டு போய் பங்கு போடுவோம்.மிளகாபொடி வச்சி,உப்பு வச்சி தின்டா... ஸ்ஸ்ஸ் ஆஆஆ இப்ப நினச்சாலும் பல்லு கூசுது.இது மாரிதான் மாங்கா பரிக்கிறதும்.இப்படி சைக்கிள்கிராப்(ஆட்டோகிராப்) நீளும் கை வலிக்கிது அது நால இதொட நிறுத்துறேன் மன்னிச்சுடுக்க!

Sunday 7 October 2012

பழைய சோறு: மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்றுஇருக்கும்




பழைய சாதத்தில் இவ்வளவு விஷயமா......?

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. (ஆனால் இன்று நட்சத்திர ஹோட்டல்களில் மெனு கார்டில் முதலிடம் பழைய சோறு காரணம் கீழே முழுவதும் படிங்க..)

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம்.
இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது.

பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்து விட்டோம் , சிறிது நேரத்தில்
ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார். அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான்
வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும்.

காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம்.
இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட. காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும்.

அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல்
இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப்
கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்குஅதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா?
(என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க
வேண்டியாத இருக்கு)

பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள்
கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்றுஇருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.

குமரிப் பெருங்கண்டம்: நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம்...



நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். 1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு 2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா 3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா 4. தொலை கிழக்கில் – சீன நாடு 5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர் 6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

நமது கிராமம் அரசூர், விழுப்புரம் மாவட்டம். My Village Arasur, Villupuram - 607107


அரசூர்  
       தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில் சுமார் 14 கிலோ மீட்டர்  தூரத்தில் தெற்கே அரசூர் ஊராட்சி அமைந்துள்ளது.  பல ஆண்டுகளுக்கு முன் அரசர்களும், குறுநில மன்னர்களும் அரசூரை மையமாக வைத்து ஆட்சி செய்ததால் அரசனூர் என்று அழைக்கப்பட்டது அரசனூர் பேச்சி வழக்கில் மறுகிஅரசூர் என்ரானது. இந்த ஊரின் வடக்கே விழுப்புரம், கிழக்கே கடலூர், மேற்கே திருகோவிலூர், தெற்கே உளுந்தூர்பேட்டையும் உள்ளது. சென்னை to  கன்னியாகுமரி பைபாஸும்,  கடலூர் to பெங்களூர் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளத்தால் பல கிராமங்களின் மையமாக உள்ளது. விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியிலும், முன்னர் திருநாவலூர் தொகுதியாக இருந்தது தற்போது உளுந்தூர்பேட்டை தொகுதியாக உள்ளது. திருவென்னைநல்லூர் ஒன்றியத்தின் கீழ் செயல்படுகிறது. அரசூர் ஊராட்சியில் சுமார் 7,500 மக்கள் வசிக்கின்றனர் இதில் 5,500 வாக்காளர்களும்  95 % மக்கள் படிப்பறிவு பெற்று உள்ளனர். அரசூரை சுற்றி இருவேல்பட்டு, ஆலங்க்குப்பம், தென்மங்கலம், கிராமம், காரபட்டு, குமாரமங்கலம், பொய்கையரசூர், மாமந்தூர், கந்தலவாடி,  சித்தனங்கூர், பேரங்கியூர், அரும்பட்டு, மடப்பட்டு போன்ற கிராமங்கள் உள்ளன.
        ஊரின் நீராதாரமாக தென்பெண்ணை ஆற்றின் கிளையாரான மலட்டாறும், பெரிய ஏரியும் உள்ளது. வராகியம்மன், திரௌபதியம்மன், துர்க்கையம்மன், அங்காளபரமேஸ்வரி, பவானியம்மன், அய்யனார், தந்துநூரன், ஆஞ்சநேயர்  உள்பட  18 கோவில்களும், 18 குளங்களும்,  மலட்டாறும் உள்ளது ஊரின் சிறப்பாகும். மாணவர்கள் தடையின்றி படிக்க தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி மற்றும் புகழ் பெற்ற V .R .S பொறியியல் கல்லூரியும் ஊரிலேயே அமைந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் JCB, பாலாஜி டைல்ஸ், உரக்கம்பெனி, 22KV துணை மின்நிலையம், பேங்க் ஆப் பரோடா, ERS, கிருஷ்ணவேணி திருமண மண்டபம் உள்பட  பல வர்த்தக நிறுவனங்கள் கொண்ட கிராமமாக உள்ளது. MGR, கலைஞர், வைகோ, பாக்கியராஜ், ராமராஜ் ஆகியோர் தங்கிய அரசு பயணியர் பங்களா உள்ளது. 2011ல் வெளியான எங்கேயும் எப்போதும் அரசூரை மையமாக வைத்து அரசூரில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
      அரசூரின் அருகில் புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் (12 KM), பரிகல் நரசிங்க பெருமாள் கோவில் (10 KM), கிராமம் திருமுண்டீஸ்வரர் (4 KM), திருவென்னைநல்லூர் தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர் (7 KM), பிடாகம் தென்பெண்ணை ஆறும் உள்ளது. 
        திரு. லஷ்மி நாராயணன் படையாச்சி, திரு. A.V. பாலசுப்ரமணியன் ஆகியோர் ஒன்றிய பெருந்தலைவரகவும், திரு A.J. பன்னீர்செல்வம் (1991 - 1995), திரு. A.V. பாலசுப்ரமணியன் (1989 - 1991) ஆகியோர் சட்ட மன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்தேடுக்கப்பட்டனர். 9 வார்டுகளை கொண்ட அரசூர் ஊராட்சில் திரு. ஆனந்தன், திருமதி. சக்தி ஆனந்தன், திருமதி. முத்தழகி ராஜாராமன், திரு A.J. பன்னீர்செல்வம் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவராகவும், 2011ல் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில்திரு. மேகநாதன் அவர்கள் வெற்றி பெற்று தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். 
         சென்னை to  கன்னியாகுமரி பைபாஸ் ஊரின் நடுவே செல்வதால் அடிகடி விபத்துக்கள் நடப்பது அரசூர் மக்களிடையே பெரும் இடையூறாகவும், அச்சமாகவும்  உள்ளது.
                                                                                                                            - முரளிகிருஷ்ணா 
       

Saturday 6 October 2012

உண்டியல் காசு: ஐம்பது பைசா / ஒரு ரூபாய் என்று ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது...



சிறு வயதிலிருந்தே பாக்கெட் மணி போல காசு கிடைத்தால் செலவு செய்து பழக்கம் இல்லை.ஊரிலிருந்து வந்து செல்லும் உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது குழந்தைகளுக்கு ஐம்பது பைசா / ஒரு ரூபாய் என்று ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. அதனால் ஒரு சிறு கணிசமான  தரும் காசுகளை உண்டியலில்  சேமிப்பும் இருந்தது.

நண்பர்கள் இந்த மாதிரி காசை மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் உடனே செலவு செய்து விடுவார்கள். சிலர் என்னைப் போல சேமித்து வைத்திருப்பார்கள். அஞ்சு பைசா அம்மு போல உண்டியல் வைத்திருப்போம். செலவு செய்யாமல் சேர்த்து சும்மா வைத்திருப்பதற்கு பெற்றோரிடமே கொடுத்து விடலாமே என்று நண்பர்கள் கிண்டலடிப்பார்கள்.

பின்னர், பள்ளியில் சஞ்சாயிகா திட்டத்தில் சேர்த்து வைக்கப் பட்டு, சேர்த்ததுண்டு. ஆனால் அது பள்ளியின் கட்டாய திட்டம் என்பதால் அதிகம் சேர்க்க முடிந்ததில்லை! கட்டாயப் படுத்தும் போது சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது!

அஞ்சலக சேமிப்பில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடங்கியது. நம் கையெழுத்தையே சந்தேகப் படத் தொடங்கி ஒருமுறை பணம் திரும்பி வாங்குவதில் தாமதமானது. அதில் சேர்த்த பணத்தில் முதல் முறை பெற்றோர், மற்றும் உடன் பிறந்தோருக்கு ஒரு தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. சேமிப்பேன். சந்தோஷமாகச் செலவு செய்ய! 




வேலைக்குப் போகத் தொடங்கிய பிறகு கணக்கு எழுதும் பழக்கம் அப்பாவினால் சொல்லிக் கொடுக்கப் பட்டது. வாங்கும் சம்பளத்துக்கு வரவு செலவு எழுதும் பழக்கம் வந்தது. நல்ல பழக்கம்தான். இதில் சில பல உதவிகள் உண்டு. ஒருசமயம், கேபிள்காரர் ஆறு மாதமாய் பணம் தரவில்லை என்றபோது கணக்கு நோட்டுப் புத்தகத்தை இன்ஸ்டன்ட்டாகக் காட்டி நிரூபித்திருக்கிறேன். கணக்கு எழுதும்போது , சில குறிப்புகளுடன் எழுதுவது வழக்கம். செல்லாத ஐம்பது ரூபாய் நோட்டு கொடுத்து பின்னர் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னது' என்று அடைப்புக் குறிக்குள் இருக்கும்..! இது போல வாசகங்களை நினைவு படுத்தி சொன்னதும் அவரும் ஒப்புக் கொண்டார்.

செல்லாக் காசாக: 5 பைசாவுக்கு அக்காலத்தில் மிட்டாய் வாங்கினேன்..


நண்பர் சொல்கிறார் இன்னொரு நண்பரிடம்..உங்க பையனுக்கு உண்டியல் சேமிப்பு பழக்கம் கற்று தந்திருக்கிறீர்களா?ஆம் என்பதாய் அவர் பதில்..அப்படியாயின் உண்டியலை  உடைத்து 25 பைசாவை செலவழிக்கப் பாருங்கள்.25 பைசா ,ஜூன் 30 க்கு பின், செல்லாக் காசாக அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிறது.இதுதான் நண்பர் அந்த நண்பருக்களித்த அறிவுரை.அதைத் தொடர்ந்துதான் அந்தக் கால காசுகளைப் பற்றிய நினைவு அலசல்கள் பரபரப்பாய் பற்றிக் கொண்டது நண்பர்களிடம்..

ஒரு நண்பர் சொல்கிறார்..5 பைசாவுக்கு அக்காலத்தில் மிட்டாய் வாங்கினேன்..அப்பா பள்ளிக்கு செல்லும் போது பத்து பைசாவை என்னிடம் கொடுத்து நீயும்,தம்பியும் மிட்டாய் வாங்கி சாப்பிடுங்கள் என்பார்!அது ஒரு கனாக்காலம்…என்கிறார் பெருமூச்சோடு!
அடுத்தவர் ஆரம்பிக்கிறார்…அது பத்து பைசாவைப் பற்றிய நினைவு..நினைவிருக்கிறதா உங்களுக்கு ,சரியான வட்டமாக அல்லாமல் பூவின் இதழ் போன்ற வட்டத்தில் அக்கால பத்து பைசா..ரயில் தண்டவாளத்தில் நசுங்க வைத்து ரசித்திருக்கிறேன்.பைசாக்களை பால்பேப்பர் நோட்டில் வைத்து பென்சிலால் தேய்த்து அதன் அச்சு எடுத்திருக்கிறீர்களா..அதெல்லாம் அக்கால விளையாட்டு.மோதிரம் செய்த கதையும் உண்டு என்கிறது அவரின் நினைவலைகள்.
அடுத்தவர் வார்த்தையில் 20 பைசா நிழலாடுகிறது..20 பைசா பற்றி அவர் நினைவு படுத்துகையில் பலரின் நினைவுகளில் அதன் அமைப்பு மறந்து போயிருக்கிறது…அவர் இருபது பைசாவில் சேமியா ஐஸ் வாங்கிய சுவையான நினைவுகளை அசை போடுகிறார்.பைசாவில் h ,m , t தனி தனி காயின்களை ஒன்று சேர்த்து கொடுத்தால் hmt வாட்ச் தருவார்கள் என்று யாரோ கதை கட்டிகளின் கதைகளை ,அக்காலத்தில் நம்பி இருப்பதாகவும் வெம்பி சொல்கிறார்.பைசா வைத்து பைசா கோபுரம் கட்டிய கதையும் இடையில் வந்து போகிறது..
இப்படியாய் நீள்கிறது காணாமல் போன பழைய 50 பைசா,1 ரூபாய் நோட்டு,பளபள சின்ன பத்து பைசா நினைவுகள்,அதனை சுற்றிய கதைகள்..நான் குழந்தையாக இருந்தபோது,என் தாத்தா 1 பைசா,2 பைசா,1 /2 அனா  நினைவுகளைப் பற்றி சிலாகித்ததும் என் நினைவிலிருந்து மறையாமல் இன்னும் நிழலாடுகிறது.ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் வளர்ச்சிக்கேற்ப,நாணயங்களின் மதிப்பிற்கேற்ப அவை மாறவே,மறையைவோ செய்கின்றன.அது காலத்தின் கட்டாயம்..இருந்தாலும்…அந்த பழைய பைசாக்களை பார்க்கும் போது  அது நம்மில் உண்டாக்கும் சிலிர்ப்பு மாறுவதில்லை.அக்கால காசுகள் இக்காலத்தில் செல்லாக் காசாகலாம்..ஆனால் அதனைப் பற்றிய நினைவுகள் நம்மிடத்தில் எப்போதும் செல்லாமல் போவதில்லை!!இனிமையான நினைவுகளை சேமித்துக் கொண்டே இருக்கின்றன!

யானைப் படம், கலர்ப் படம் அதுவும் ரஜினிப் படம்...


யானைப் படம், “கலர்ப் படம்அதுவும் ரஜினிப் படம். எனக்கு சந்தோஷம் தாங்கல. கொஞ்சம் அம்மாவ நினைச்சா பயமா இருந்துச்சு ஆனா கூட இருந்த ஆறு பேரப் பார்த்தப்போ என் பயமெல்லாம் அமிர்தாஞ்சன் குணப்படித்திய தலவலி மாதிரிபோயே போச்சு,..இட்ஸ் கான்,..போயிந்தே..

ஏழு பேரும் கையப் பிடிச்சிக்கிட்டு வரிசையா அந்த மொட்ட வெயிலுல குடியரசு தின விழா பரேடு மாதிரி ஜாலியா ஆரஞ்சு மிட்டாய சப்பிட்டேப் போனோம். தெருவுல யாரும் இல்ல. இல்லைனா, அப்பவே வீட்டுக்கு நீயூஸ் போய் எனக்கு ஸ்ஷெல் பரேடு நடந்திருக்கும். ஆனா, விதி வேற மாதிரி யோசிச்சுருந்தது. எப்படின்னா - இவ படம் பார்த்துட்டு வ்ரணும், வந்து வீட்ல நாலு மாத்து வாங்கணும், பின்னாளுலுல இவங்கம்மா இவள மொத்துனத பிளாக்ல இரண்டு மொக்க போஸ்ட் போடணும்னு.

சொப்பு சாமான், காய்கறி பலசரக்கு கடை, பேங்க் விளையாட்டு விளையாடறப்போ இருக்கிற ரொம்ப பெரியவங்க ஆன மாதிரியான த்ரில்ல விட இது செம த்ரில்லா இருந்துச்சு. நாங்களே லைன்ல நின்னு டிக்கெட் வாங்கி, எங்கம்மா அப்பா கூட்டிட்டு போற பின்னாடி சீட்டு இல்லாம, சில சமயம் அதுக்கு மேல போய் பால்கனில தனியா உட்கார்ந்து தீவுலர்ந்து பார்க்கற மாதிரி எல்லாம் இல்லாம. ஃப்ர்ஸ்ட் ரோ சீட்.

ஃபர்ஸ்ட் ரோ!!! என்னோட பல நாள் கனவு. எனக்கு எப்படி இருந்திருக்கும் பாருங்க. ஹய்யோ...மனசெல்லாம்  சந்தோஷமா இருந்த்து. நானும் கனியும் ஒரே சிரிப்பும் பேச்சுமா படம் பார்த்தோம் (அதுக்கப்பறம் நல்லா அழப் போறேன்னு தெரியாமா). 




“அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாட்டுக்கு எங்கூட வந்த பசங்களெல்லாம் டான்ஸ் வேற. செம ஜாலியா இருந்துச்சு. இன்டெர்வல்ல அந்த நாலணவுக்கு முறுக்கோ, கடல மிட்டாயோ ஏதோ வாங்கித் தின்னோம். படம் பாத்தப்பறம் கண்ணேல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு, காதெல்லாம் கூட ஒரு மாதிரி கொய்ய்ன்னு இருந்துச்சு. அந்த தியேட்டர்ல அக்கௌஸ்டிக் (Acoustics) சரியில்ல.

பலூன்: பலூன் காற்று வெளியேறும்வரை சப்தம் கேட்கும் ..

என் சிறுபிள்ளை பருவத்தில் ..கிடைத்த உயர்ந்த விளையாட்டு பொருள் ..இதுவே இப்போதுபோல் ..ரிமோட் கார் ,வித விதமான பொம்மைகள் எல்லாம்  அப்போது நான் காணகூட கிடைத்ததில்லை ..எங்கள்  ஊர் திருவிழாவில் ...ஒரு கம்பில் கொத்து  கொத்தாய்  தொங்கும் பலூன்களோடு ...மூங்கிலால் செய்யப்பட்ட ஊத்து வைத்துக்கொண்டு நிற்கும் வியாபாரி தாத்தாவை  பார்த்தாலே ஏக்கம் வரும் .ஒரு பலூனை ஊத்தின்  ஒரு முனையில் இணைத்து ஊதினால் ...பலூன் பெரிதாகும் ...பின்னர் நாம் வாயிலிருந்து ஊத்தை  வெளியில் எடுத்தால் ...பலூன் காற்று வெளியேறும்வரை சப்தம் கேட்கும் ..சில சிறுவர்கள் முதல்நாளே வாங்கி என் முன்னால்  ஊதி பொறாமையை  உருவாக்குவர் .ஆசை ஆசையாய் வரும் .வாங்கி கேட்டால்  ...அதட்டியும் ...அடித்தும் ...இயலாமையை  மறைப்பார் ..என் அம்மா ...

இறுதி நாள் திருவிழா அன்று ... எப்படியாவது ஓன்று கிடைத்துவிடும் ..கூடவே ஒரு குச்சி ஐஸும் ....என் திருவிழா கொண்டாட்டம்  இனிதே நிறைவடையும் ..இப்போது என் குடும்பத்து குழந்தைகள் ...திருவிழா பொம்மைகள் வாங்கி  கேட்டால் முடிந்தவரை நான் மறுப்பதில்லை ...காரணம் ..கனத்த நினைவுகள் .என் .நெஞ்சில் இருப்பதால் ...............

சீத்தா பழம்: எங்கள் ஊரில் ...எங்கும் கிடைக்கும் ...முக்கியமான பழம் ...


சீத்தா பழம்:

சீத்தா பழம்


எங்கள் ஊரில் ...எங்கும் கிடைக்கும் ...முக்கியமான பழம் ...சீத்தா பழம் ,கமலா பழம் , என்பதைவிட ...நாட்டு முந்திரி என்ற பேரில் அதிக அறிமுகமானது ..
பெரிய பாதுகாப்புகள் என்றி ..எங்கும் காய்த்து நிற்கும் ..வௌவால் ..பறவைகள் உண்டது போக ...மீதி எங்களால்  உண்ணப்படும் ..

தோட்டை ..மெதுவாக பிரித்து ..உள்ளே காணப்படும் சுளைகளை ...சாப்பிட்டு ..விதைகளை ...வெளியே ..துப்பிவிட வேண்டும் .சுளைகளை சாப்பிட்ட பின்னர் ..தோட்டின் உள்பகுதியில் ..ஒட்டி இருக்கும் மிச்சபகுதியை ..வழித்து சாப்பிட வேண்டும் ..ஸ்பூன் பயன்படுத்தி சாபிட்டால் .கொஞ்சம் கூட வீணாகாமல் சாப்பிடலாம் ..

பெரிய அளவில் சத்துக்கள் ஏதுமில்லை ...அதிகம் சாபிட்டால் ..

பிரில் மை(Bril Ink) : பரீட்சை எழுதும் போது பேனாவில் மை தீர்ந்து விட்டால் உடனே


பிரில் மை(Bril Ink) : 

 இந்த படத்தில் காண்பதை எங்காவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா. பிரில் மை, நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, நமது படிப்பிற்கு இதன் பங்கு மிக முக்கியமானதாகும். பேனாக்களில் இந்த மையை ஊற்றி அதனை வைத்து எழுதும் போது, அந்த எழுத்துக்களின் அழகே அழகு. 
ஆனால் தற்காலத்தில், பந்து பேனா, அரைத்தின்மக் கரைசல் பேனா (ஜெல்), நுன்முனை பேனா போன்றவற்றின் படையெடுப்பால் இந்த பிரில் மையின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. எனக்கு தெரிந்து தற்போது இதனை பயன்படுத்துபவர்கள் யாரும் இல்லை என்று தான் நினைக்கிறேன். 
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அனைவரும் இதனை பயன்படுத்தினார்கள். அப்போது நான் படித்த பள்ளிக்கூடத்தில் பரீட்சை எழுத மை பேனா தான் உபயோகிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. பரீட்சை எழுத வரும் மாணவர்கள் அனைவரும் தங்களுடன் இரண்டு பேனாக்களை எடுத்துச் செல்வது வழக்கம். அந்த பேனாக்களுடன் ஒரு சிறிய குப்பியில் இந்த பிரில் மையை நிறைத்து உடன் வைத்திருப்பர். ஏனென்றால் பரீட்சை எழுதும் போது பேனாவில் மை தீர்ந்து விட்டால் உடனே இந்த சிறிய குப்பியில் இருந்து பேனாவில் மை நிறைத்து பரீட்சை எழுதி வந்தார்கள். இதனால் அவர்களுக்கு தடையில்லாமல் பரீட்சை எழுத முடிந்தது. நிப்பு ,கரிகாம்பு ,பில்லர் ..என்று மறக்க முடியாத அனுபவங்கள்அனைவருக்கும் உண்டு ..
அப்பொழுது மாணவர்கள் ஹீரோ பேனாக்களை கூடுதலாக பயன்படுத்தினர். அந்த பேனாவின் முனையை குப்பியில் வைத்து அதன் பிஸ்டனை அழுத்திவிட்டு திரும்ப விட்டு விட்டால், குப்பியில் உள்ள மை பேனாவில் வந்து விடும். மேலும் பரீட்சை எழுதிவிட்டு வரும் மாணவர்களின் கைகளில் இந்த பிரில் மையின் அடையாளம் மறக்க முடியாதது. பரீட்சை முடிந்து விட்டால் பேனாவின் மையை பிற மாணவர்களின் சட்டையில் உதறி விளையாடுவதும், அதனால் சட்டையில் வரும் அடையாளமும், வீட்டுக்கு சென்றவுடன் அந்த அடையாளத்தைப் பார்த்து அம்மா திட்டுவதும் இன்றும் மறக்க முடியாதவை.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, எனது பெஞ்சின் பின் பெஞ்சில் உள்ள ஒரு நண்பன் தனது பேனாவில் மை அடைக்கும் பொழுது தவறி எனது சட்டையில் பட்டுவிட்டது. இதனை பார்த்த எனது வகுப்பாசிரியர்  அந்த நண்பனை பிடித்து அடித்துவிட்டார். அந்த விஷயம் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.  

கன்னித் தீவு சிந்துபாத் :

கன்னித் தீவு சிந்துபாத் : 

'கன்னித் தீவு' என்ற வார்த்தைகள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டோர்கள் மட்டுமல்ல சராசரி தமிழ் வாசகர்கள் கூட அறிந்தவை. தினத்தந்தியில் 47 வருடங்களாக தொடர்ந்து வெளிவரும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கன்னித் தீவு. இது 1961 -இல் வெளிவர தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. தற்போதைய கன்னித் தீவு '17,226' நாட்களை தாண்டியுள்ளது. 

தொடக்க காலத்தில் இரண்டாம் பக்க அடியில் வெளி வந்தது. பின்னர் இரண்டாம் பக்க மேற்பகுதியில் இன்றுவரை வெளியிடபடுகிறது. பாலன் என்ற ஓவியர் தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார்? 1961-இல் அவருக்கு வயது 20 என்றாலும் கூட தற்போது அவருக்கு 67 வயதாக இருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. எனவே தற்போதுள்ள பாலனும், ஆரம்ப கால பாலனும் ஒருவரே என்பது கேள்விக்குரியதே! சித்திரங்களின் தரத்தை எடுத்துகொண்டாலும் கூட சற்று கூட ஒப்பிட முடியாத அளவிலேதான் இருக்கின்றன. சிந்துபாத், லைலா, மந்திரவாதி மூசா இவர்கள் தான் முக்கியமான பாத்திரங்கள். எனக்கு தெரிந்தவரை கன்னித் தீவு கதையை 'சுருக்கமாக' இப்படி சொல்லலாம். 

சிந்துபாத் ஒரு மன்னனின் இளம் தளபதி. லைலா இளவரசி. மூசா என்ற 'கொடிய' மந்திரவாதி 'கன்னித் தீவு' என்ற 'கன்னிகள்' நிறைந்த தீவில் அழகிய நங்கைகளை கொண்டு தனது அந்தபுரத்தை அலங்கரிப்பதையே பொழுதுப்போக்காக கொண்டவன். மூசா அடிக்கடி தனது மாயக் கண்ணாடியில் 'தற்போது உலக அழகி யார்?" என்று கேட்பான். மாயக் கண்ணாடியும் லேட்டஸ்ட் உலக அழகியை உடனடியாக காண்பிக்கும் (குளோபல் போசிசனின் சிஸ்டம்?) உடனே தனது மந்திரப்படையை சேர்ந்த அரக்கி, ராட்சசன், குட்டி பூதம் என யாரையாவது ஒருவரை அனுப்பி அந்த அழகியை தூக்கி வர செய்வான். (பெரும்பாலான அழகிகள் இளவரசிகளாக த்தான் இருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?)
அப்படித்தான் ஒரு பொன்மாலைப்  பொழுதில் மாயக்கண்ணாடி லைலாவை மூசாவுக்கு காட்டிக் கொடுத்தது. சற்றும் தாமதிக்காமல் மூசா தனது பரிவாரங்களை அனுப்பி பெண் கேட்டான். அரசன் மறுக்கவே லைலாவை சிறிய உருவமாக்கி விட்டான். (இந்த இடத்தில் 'நடந்தது என்ன?' என்று சரியாக தெரியவில்லை, மூசாவே நேரடியாக வந்து பெண் கேட்டதாக கேள்வி பட்டிருக்கிறேன்..!) சிறிய உருவமான லைலாவை பழையபடி மாற்றும் பொறுப்பு நமது கதாநாயகன் சிந்துபாதிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிந்துபாத்தும் லைலாவை ஒரு பெட்டியில் போட்டு இடுப்பில் கட்டி கொண்டு தனது 'முடிவில்லா' பயணத்தை தொடர்கிறான். 

மாயாவி ராணி காமிக்ஸ்: ஒரே ஒருபக்கம் மட்டும் ..எளிய புதிர் விளையாட்டு இடம்பெறும் .வருடம்தோறும்...


வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு ..தினமலரின் சிறுவர் மலருக்கும் ..ராணி காமிக்ஸ் இதழுக்கும்  உண்டு ..சிறுவயதிலேயே ...வறுமையான காலத்திலும் வீட்டில் சண்டை போட்டு பணம்வாங்கி அல்லது திருடி  ராணி காமிக்ஸ் மாயாவி வாங்கி அதன் காகித மணம் மறையும் முன்பே படிக்கும் வழக்கம் உண்டு ..அப்படி படித்தால் தான் ஒரு நிம்மதி ...புத்தகம் வெளியாகும் நாள் காலையிலிருந்தே ..எங்க ஊர் ரெத்னா ஸ்டோர் முன் காத்திருப்பேன் ...ஒருபோதும் எனக்கு ராணி காமிக்ஸ் சலிப்பதில்லை ..
 
ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா  ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற  உணர்வை தரும் ..செவிந்தியர்கள் ..அம்பு எய்யும் காட்சிகளில் எல்லாம் சிலிர்ப்பு ஏற்படும் ..ஒரு கதையில் மட்டும் மாயாவி இறந்துவிடும் சம்பவத்தை என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.அழுகையாக வந்தது ..வெறும் மீன் மட்டுமே சாப்பிட்டு வாழும் புலி ,சிங்கம் .. மற்ற எல்லா விலங்குகளிடமும் அன்பாக கலந்துவாழும் ஈடன் கார்டன் தீவு ..பசுமையான பதிவு ..முகமூடி இல்லாத மாயாவியின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இப்போதும் உண்டு
 
ஒரே ஒருபக்கம் மட்டும் ..எளிய புதிர் விளையாட்டு இடம்பெறும் .வருடம்தோறும் .ஜூன் இதழில் பள்ளிகூட லேபில் இலவசமாக தருவார்கள் .. அந்த லேபிளை காட்டி பள்ளிகூடத்தில் பெருமையடிதுக்கொள்வோம் .ராணி காமிக்ஸ் .தனது 500 வது இதழோடு நிறுத்தப்பட்டது ...என்பது எனக்கு சோகம்  தந்த செய்தி ...முத்து காமிக்ஸ் ..லயன் காமிக்ஸ் எல்லாம் வந்தாலும் எனக்கு ராணி காமிக்ஸ் அளவு பிடிக்கவில்லை ...

பத்திரமாக பாதுகாத்த 135  இதழ்களை ..எனது அம்மா ..எனக்கு தெரியாமல் .எடைக்கு போட்டது அடுத்த சோகம் ..இப்போதும் ஆவலாய் இருக்கிறேன் ..யாரிடமாவது பழைய புத்தகம் இருந்தால் ..தாருங்களேன் ..வாசித்து தருகிறேன் ..